×

சிவகிரியில் பைக்கில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல்

சிவகிரி, மே 4: புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் தனிப்படை போலீசார் செந்தில்குமார், சைலேஷ் ஆகியோர் சிவகிரியில் திரவுபதி அம்மன் கோயில் முன்பு நேற்று காலை 11 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த பைக்கை நிறுத்தும்படி சைகை செய்தனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் பைக்கை கீழே போட்டுவிட்டு அதில் வந்தவர் தப்பியோடி விட்டார். போலீசார் பைக்கை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 10 கிலோ புகையிலைப் பொருட்களுடன் பைக்கை பறிமுதல் செய்தனர். விசாரணையில் தப்பியோடியவர் அப்பகுதியில் கடை நடத்தி வரும் சிவராமலிங்கபுரம் நடுத்தெருவை சேர்ந்த கணேசன் மகன் இசக்கி (40) என்பது தெரியவந்தது. இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிந்து இசக்கியை தேடி வருகின்றனர்.

The post சிவகிரியில் பைக்கில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sivagiri ,Senthilkumar ,Sailesh ,Puliangudi ,DSP ,Venkatesan ,Tirupati Amman temple ,
× RELATED வாசுதேவநல்லூர், சிவகிரியில் அரசு...